News October 14, 2025

குமரி: சிறுவனின் தாய் மீது வழக்கு

image

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழுக்கம்பாறை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவரது வயது 17 என்பதும் பிளஸ்-1மாணவன் என்பதும் தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளம் சிறாரின் தாய் மீது வழக்குப்பதிவு.

Similar News

News October 14, 2025

ஆளூர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

image

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.

News October 14, 2025

குமரி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

image

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <>க்ளிக்<<>> செய்து “Size”ன்னு இருப்பதில் A4-இல் இருந்து AO-வாக மாற்றி சமர்ப்பியுங்கள். உங்க நிலத்தின் துல்லியமான FMP வரைபடம் கிடைக்கும். இனி உங்க இடம் நீளம், அகலம் துள்ளியமா இருக்கும். மற்றவர்களுக்கும் தெரிய SHARE செய்யுங்க!

News October 14, 2025

குமரி: 1200 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

image

கொல்லங்கோடு போலீசார் மிக்கேல் காலனிபுரம் பகுதியில் நேற்று (அக்.13) வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 1,200 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காரில் மண்ணெண்ணையுடன் 37 கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த அமீன் (38), ஷாஜகான் (39) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!