News September 4, 2025

குமரி: சாட்சி சொன்ன பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் விஜூராஜ்(42). 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தங்கையின் தோழியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மகளுக்கு ஆதரவாக சாட்சி சொன்னதால் பெண்ணின் தாயாரை கத்தியால் விஜூராஜ் வெட்டினார். இதில் நேற்று விஜூராஜூக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

குமரி மாவட்ட அனைத்து காவல்நிலையங்களின் எண்கள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <>CLICK <<>>கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இடம்பெற்றுள்ளது. தேவைப்படும் சமயத்தில் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதன் மூலம் அழைக்கலாம். இதனை மற்ற பகுதியிலுள்ள உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 4, 2025

மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் பாடங்களில் 178 காலியிடங்கள்

image

குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், அனஸ்தீசியா தியேட்டர் ஆர்த்தோபெடிக் டெக்னிசியன்கள் உட்பட 178 காலியிடங்கள் உள்ளன. இந்த விபரங்கள் கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கலாம் என கூறியுள்ளார்.

News September 4, 2025

குமரியில் ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

குமரி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>செப். 30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!