News September 15, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
Similar News
News September 15, 2025
குமரியில் ரப்பர் விலை சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது
News September 15, 2025
குமரி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
News September 15, 2025
குமரி: மனைவியை கொலை செய்த கணவர்

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.