News September 13, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

காட்டு விளையை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள். இவருக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பிறந்தது முதல் கணவர் குழந்தையின் தாயிடம் பேசாததால் குழந்தை வாயில் பேப்பரை திணித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 13, 2025
குமரி: ரேஷன் கார்டு பிரச்னைகளை தீர்க்க இன்று முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட செயல்பாட்டை களைவதற்காக சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.
News September 13, 2025
குமரி: வலையில் சிக்கிய மருத்துவகுண மீன்கள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலில் மீன்பிடித்த மீனவர்களின் வலையில் அதிக அளவில் அயலை மீன்கள் சிக்கின. வழக்கமாக 2500 முதல் 3000 வரை விலை போகும் ஒரு பெட்டி மீன்கள் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆனதால் மீனவர்கள் வருத்தம் அடைந்தனர்.
News September 13, 2025
குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

குமரி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <