News February 4, 2026
குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
Similar News
News February 4, 2026
குமரி: இனி பட்டா பெயர் மாற்றம் செய்வது ஈஸி…!

குமரி மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. <
News February 4, 2026
குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
News February 4, 2026
குமரி: லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

பேச்சிப்பாறை அருகே மூக்கறக்கல் பகுதியில் நேற்று மாலை மரத்தடிகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தடியுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அகில்குமார் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


