News May 21, 2024

குமரி கலெக்டர் ஆய்வு

image

குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் வரத்து அதிகமானது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமானது. இந்த வகையில் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News November 5, 2025

குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 5, 2025

குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

image

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து  2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

News November 5, 2025

குமரி: முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்

image

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய பால தண்டாயுதபாணி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட  தொடக்கக்கல்வி  அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (C.E.O) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!