News October 23, 2024
குமரி: கண்ணாடி பாலத்திற்கு தூண்கள் பொருத்தும் பணி

குமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த தூண்கள் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
கன்னியாகுமரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்கு பதிவி செய்ய ஆக.16ம் தேதி வரை கால அவகாசம்.
News August 12, 2025
குமரி: உங்க தெருவுல நாளைக்கு POWER CUT-ஆ தெரிஞ்சிக்கோங்க…!

கன்னியாகுமரி, செண்பகராமன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை (ஆக.13) மின் பராமரிப்பு பணி காலை 9 மணி – மாலை 3 மணி வரை நடக்கின்றது. செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா Whatsapp குரூப்ல உடனே SHARE பண்ணுங்க…
News August 12, 2025
குமரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️குளச்சல் – 04651 226303
▶️கன்னியாகுமரி – 04652 270309
▶️கொல்லங்கோடு – 04651 226303
▶️குலசேகரம் – 04651 277699
▶️குழித்துறை – 04651 260200
▶️நாகர்கோவில் – 04652 276331
▶️பத்மநாபபுரம் – 04651 250799
▶️தில்லை நகர் – 04651 223799