News November 8, 2024
குமரி: கடந்த 2 ஆண்டுகளில் வாகன விபத்தில் 1030 பேர் பலி!

குமரி SP சுந்தரவதனம் நேற்று(நவ.,7) கூறியதாவது, மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதாலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கும் 95 இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வாகன விபத்தில் 1030 பேர் பலியாகி உள்ளதாகவும், தற்போது விபத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
News August 8, 2025
சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
News August 8, 2025
சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.