News November 29, 2025

குமரி: கஞ்சா வழக்கில் 458 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று கூறியதாவது, போதையில்லாத குமரி என்ற இலக்கினை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். தொடர் நடவடிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

Similar News

News December 3, 2025

குமரி: தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

image

குளச்சல் அருகே பன விளை சேர்ந்தவர் ஞானசௌந்தரி (64) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஆனப்பாங்குழியில் உள்ள அக்கா வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் பலா மர இலைகளை பறிப்பதற்காக பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 3, 2025

குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

image

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2025

குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!