News December 17, 2025

குமரி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு!

image

முருகன் குன்றம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயின் திருடப்பட்டது. இதே போன்று புன்னை நகரைச் சேர்ந்த தெரசம்மாள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கார்மல் பஸ் நிறுத்தம் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News December 18, 2025

குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது  திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 18, 2025

குமரியில் 2,500 காலியிடங்கள்… கலெக்டர் அறிவிப்பு!

image

குமரி வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th,12th டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT

News December 18, 2025

குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

image

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

error: Content is protected !!