News December 31, 2025
குமரி: ஓடும் பஸ்ஸில் ராணுவ வீரர் தற்கொலை!

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கார்த்திக் (26) கடந்த 19ம் தேதி பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்துள்ளார். வரும் வழியில் ஓடும் பஸ்ஸில் வைத்து விஷம் குடித்ததாக தெரிகிறது. இவர் இருக்கையில் அமர்ந்த படி மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து வெள்ளிச்சந்தை போலீஸார் விசாரனை.
Similar News
News December 31, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் வேலை அறிவிப்பு! APPLY

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
குமரி: இளம்பெண் தற்கொலை!

அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ரெஜிலா (35). இவர் வளர்த்த மாடுகள், அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ந்ததாக தோட்ட உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, நேற்று ரெஜிலா குடும்பத்தினருக்கும், தோட்ட உரிமையாளர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரெஜிலா அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார். ஆசாரிபள்ளம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஞ்சுகிராமம் போலீஸார் விசாரனை.
News December 31, 2025
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


