News December 30, 2025
குமரி: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கணேஷ் (26) மற்றும் இவரது நண்பர் சுரேஷுக்கும், கட்டையன்விளையை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கட்டையன்விளை பகுதியில் கணேஷ், சுரேஷ் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் கணேஷ்-ஐ அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இது குறித்து பெனில் (27), ராஜு (29), வினு (31) ஆகிய மூவர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 31, 2025
குமரி: கதவை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

பார்வதிபுரத்தை சேர்ந்த அல்ஜின்டேனி(35) ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரும், இவரது மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் சென்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 31, 2025
குமரி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <
News December 31, 2025
நாகர்கோவில் – தாம்பரம் ரயில் 45நி முன்னதாக சென்றடையும்

நாளை முதல் பல்வேறு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதே போல் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஐந்து நிமிடம் முன்னதாக நாகர்கோவில் வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


