News January 15, 2026
குமரி: இளம்பெண் கர்ப்பம்; என்ஜினீயர் கைது

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஷ். வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த பெண் நடன கலைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் அபிஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அபிஷ் மீது அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அபிஷை கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
குமரி: 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக மொத்த வேட்பாளர்கள்: குமரி – 23, நாகர்கோவில் – 34, குளச்சல்–20, பத்மநாபபுரம் –19, விளவங்கோடு – 20, கிள்ளியூர் – 19 மொத்தம் ஆண் வேட்பாளர்கள் 114, பெண் வேட்பாளர்கள் 21 என வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
News April 7, 2026
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பரிதாப பலி

தக்கலை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் சிபு, சீனு இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மூத்த மகன் சிபு திருமணத்திற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
குமரி: பைக் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் இருந்த வரதராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


