News October 24, 2024
குமரி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு.ராஜசேகரன் 30க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.47 கோடி மோசடி செய்ததாக பெண் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் ஏசு.ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஜ.ஜி உத்தரவு.
Similar News
News October 22, 2025
குமரி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 22, 2025
குமரி: கடன் கேட்டு போராட்டம் நடத்திய வாலிபர்

குமரி, கிராத்தூர் பகுதி பட்டதாரி சுஜின்(35) கிராத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10,000 கடன் கேட்டுள்ளார். அங்கிருந்த செயலாளர் சுஜினின் உறுப்பினர் சேர்க்கை அங்கீகரிகபடவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினார். இதனால் சுஜின் நேற்று (அக்.21) கூட்டுறவு அலுவலகம் முன்பு பதாகையுடன் கடன் கேட்டு போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் சுஜினை காரில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று எச்சரித்தனர்.
News October 22, 2025
குமரியில் கோடிகளை தாண்டி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது.18-ந் தேதி ரூ.4 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 910-க்கும், 19-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்து 59 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆனது. தீபாவளி அன்று ரூ.4 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரத்து 760-க்கு மதுபானங்கள் விற்பனையானது.