News August 4, 2025
குமரி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மகள் மனிஷா (23). தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இவர் நேற்று தந்தையிடம் ஆண்ட்ராய்டு போன் வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு கோவில் திருவிழா முடிந்த பின் வாங்கித் தருவதாக தந்தை கூறிய நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
ஆக.30, 31 மதுக்கடைகள் மூட உத்தரவு

குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- குமரியில் ஆக.30, 31ல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை உட்பட 11 இடங்களில் நடைபெறுகிறது. எனவே ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மதுபானக் கடைகள் & எப்.எல். உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி முடியும் வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
News August 27, 2025
குமரி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
குமரி: கந்து வட்டி கேட்டு மிரட்டினால் இதை பண்ணுங்க.!

குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது அதிக வட்டிப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பான தகவல்களை 8122223319 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம். கந்து வட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.