News December 5, 2024
குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 285 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 185 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 465 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News January 10, 2026
குமரி: திருமணம் ஆகாத விரக்தியில் பெண் தற்கொலை

நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தை சேர்ந்தவர் 33வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (ஜன.10) காலை அவரது பெற்றோர் இதை பார்த்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். (தற்கொலை தடுப்பு உதவி எண்: 104)
News January 10, 2026
குமரி: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

குமரி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 10, 2026
உங்கள் கனவுசொல்லுங்க திட்டம்; 1057 பணியாளர்கள் நியமனம்

உங்கள் கனவு சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் கணக்கெடுப்புநடைபெற இருக்கிறது. அவர்களை சந்தித்து கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இதற்காக 1507 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 குடும்பங்களை ஒவ்வொருவரும் கணக்கெடுப்பார்கள் என குமரி மாவட்ட அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.


