News March 12, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.15 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 175 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 52 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Similar News
News March 12, 2025
குமரி-பெங்களூர் ரயில் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது

பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ரயில் பாதைகள் அமைப்பதற்கான தளங்கள் இடிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலையத்தில் பயணிகளை கையாள முடியாது என்பதை தொடர்ந்து கன்னியாகுமரி கே எஸ் ஆர் பெங்களூர் விரைவு ரயில் நாளை (மார்ச் 13) முதல் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் நீக்கப்படுகிறது. share it
News March 12, 2025
ஆற்றுக்கால் பொங்கல் விழா – சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நாளை(மார்ச் 13) தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலக செய்திக் குறிப்பில் இன்று கூறப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
News March 12, 2025
குமரி சுற்றுலாத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். “இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும்; அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளர்.