News December 14, 2024
குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை நாள் கூட்டம் வருகின்ற டிச.19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும். விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
குமரி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

கருங்கல் அருகே பாலூர் கிளி மூக்கு விளைபகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கொத்தனாரான இவர் நேற்று காலை வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 7, 2026
குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News March 7, 2026
குமரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

குமரி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


