News November 9, 2024

குமரியில் வக்கீல் கொலை; வெளியான திடுக்கிடும் தகவல்!

image

தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஜோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிமுத்து உடன் அவரது தம்பி தளவாய், வன்னிய பெருமாள், பாண்டி, ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐயப்பன் தவிர மற்றவர்கள் இசக்கிமுத்துவின் உறவினர்கள். இசக்கிமுத்துக்கு உதவி செய்ய இவர்கள் அவருடன் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜோபியை கொன்று எரிப்பதற்கு உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News August 8, 2025

குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

image

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!