News December 13, 2025

குமரியில் தொழிலாளி சடலமாக மீட்பு!

image

ஈசாந்திமங்கலம் ஞானதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). பல தோப்புகளில் மரத்தில் இருந்து தானாக விழும் தேங்காயை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (டிச.12) காலையில் சீதப்பால் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்? வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

News March 3, 2026

குமரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News March 3, 2026

குமரி: பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐரின் சேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மாநகர பாஜக கவுன்சிலர் சுனில் மற்றும் ராஜா உட்பட 12 பேர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!