News April 24, 2024

குமரியில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

Similar News

News August 14, 2025

ஆக.18ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட்.18ம் தேதி காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

குமரி: உங்க வாட்டாச்சியர் போன் நம்பர் தெரியுமா?

image

கன்னியாகுமரி மக்களே.. உங்களது வட்டாட்சியரை தொடர்புகொள்ள இந்த எண்களை மறக்காமல் SAVE பண்ணிக்கோங்க…
▶️வட்டாச்சியர், அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️வட்டாச்சியர், தோவாளை – 04652282224
▶️வட்டாச்சியர், கல்குளம் – 04651250724
▶️வட்டாச்சியர், விளவங்கோடு – 04651260232
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)தோவாளை – 04652282224
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 14, 2025

குமரி: 1450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது – எஸ்.பி.

image

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் 1450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று(ஆக.13) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!