News February 25, 2025

குமரியில் திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்து

image

தவக்காலத்தை யொட்டி குமரியில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, ராஜாவூர் உள்பட 17 கிறித்துவ திருத்தலங்களுக்கு திருப்பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 5-ந்தேதி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் தினமும் காலை 6-30 மணிக்கு வடசேரியில் இருந்து புறப்பட்டு மீனாட்சிபுரம் வழியாக சென்று இரவு 7-15 மணிக்கு குளச்சல் புதூர் திருத்தலத்தை சென்றடைகிறது.

Similar News

News March 9, 2026

குமரி கடலில் 1,448 ஆமை குஞ்சுகள்

image

குமரி மாவட்டத்தில் லெமன் கடற்கரை ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல் ஆகிய இடங்களில் முட்டையிடப்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு லெமூர் கடற்கரை மற்றும் துவாரக பதி கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன. இதில், 1448 குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக நேற்று கடலில் விட்டனர்.

News March 9, 2026

குமரி: போலி நகை வைத்து ரூ.4.50 லட்சம் மோசடி

image

படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி( 63). இவர்
நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் குளிச்சாணி பகுதியைச் சேர்ந்த வித்யாதரன் (48) மற்றும் நெயாற்றின் கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ஆகிய இருவரும் 111.90 கிராம் போலி தங்க நகையை அடகு வைத்து சுமார் ரூ.4.50 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2026

மழைநீர் ஓடையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

image

ஏற்றக்கோடு புத்தன் விளையை சேர்ந்தவர் சிங் (38). 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கேபிள் வேலை செய்த போது விபத்து ஏற்பட்டு இடது புற கணுக்காலின் கீழ் பகுதி அகற்றப்படது. இந்நிலையில் வீயன்னூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு வந்த சிங் அப்பகுதியில் உள்ள மழைநீர் ஓடையில் விழுந்துள்ளார். இதில் ஏற்கனவே காயம் ஏற்பட்ட காலில் மீண்டும் காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!