News November 19, 2024
குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்

குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News August 8, 2025
கைத்தறி ஆடைகள் வாங்கிய எம்.எல்.ஏ

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று (ஆக.7) நாகர்கோவில் மேற்கு மாநகர் பாஜக சார்பாக 17-வது வார்டு நெசவாளர்க் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சந்தித்து கைத்தறி ஆடைகளை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.
News August 7, 2025
குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <