News October 25, 2025
குமரியில் காலை 8 மணிக்கு இங்கெல்லாம் கரண்ட் கட்!

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (அக். 25) நடைபெற உள்ளது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவே உங்க பணிகளை வேகமாக 8 மணிக்குள்ள முடிங்க…SHARE!
Similar News
News October 26, 2025
குமரி: அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை – அதிகாரி

கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: அமெரிக்க சுங்க விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட 2 மாத இடை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் அமெரிக்காவுக்கு அனைத்து வகை அஞ்சல் சேவைகளையும் இந்தியா தொடங்கியுள்ளது.அமெரிக்காவுக்கு அனுப்பபடும் பார்சல்கள் மீதான அனைத்து பொருந்தக்கூடிய இறக்குமதி வரிகளும் முன்கூட்டியே வசூலிக்கபடும்.
News October 25, 2025
குமரி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

குமரி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


