News September 11, 2025
குமரியில் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

குமரி, குழித்துறை தெற்றிவிளை வீட்டை சேர்ந்தவர் அஜித் (31), இவர் குழித்துறை நகராட்சியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று 9-ம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஆஷா களியக்காவிளை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
Similar News
News September 11, 2025
குமரி: விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழி மாற்றம்

சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
News September 11, 2025
குமரி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

கொல்லங்கோடு சுதர்சன், கீதாகுமாரிக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கீதாகுமாரி குழந்தைக்காக சிகிச்சையில் இருந்தார். குழந்தை இல்லாத வேதனையில் கீதாகுமாரி செப்.9.ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுக்குறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை.
News September 11, 2025
குமரி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

குமரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..