News October 2, 2024
குமரியில் ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு!

நாகர்கோவில் மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது நேற்று(அக்.01) மொத்தம் 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மது அருந்திய ஒட்டுநரின் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகர போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Similar News
News August 18, 2025
ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ பயிற்சி

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.
News August 18, 2025
குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
News August 18, 2025
குமரி: UNION வங்கி மேனஜேர் வேலை – APPLY NOW!

குமரி இளைஞர்களே! பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் WEALTH MANAGER 250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. M.B.A மற்றும் P.G, PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்து 25 – 35 வயதுக்குள்ளவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 64,820 – 93,960 வரை சம்பளம். இங்கு <