News October 19, 2025

குமரியில் ஒருவர் தற்கொலை

image

நித்திரவிளை கிளாச்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (68) கொத்தனார். நோயால் பாதிக்கப் பட்டு உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதரன் அக்.16ம் தேதி இரவு பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் நேற்று (அக்.17) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News

News October 19, 2025

நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் 18,244 பேர் பயன்

image

நேற்று (அக்.18) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 முகாம்கள் நடந்துள்ளது. 17 உயர் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 5,430 ஆண்,12,814 பெண் என மொத்தம் 18,244 பேர் பயனடைதுள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றார். 

News October 19, 2025

குமரி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

image

குமரி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <>கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 19, 2025

குமரி: வெங்கடாஜலபதி கோயிலில் நாளை தீபாவளி ஆஸ்தானம்

image

திருப்பதியில் ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல், கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நாளை நடைபெறும். நாளை சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து விசேஷ பூஜைகள், சிறப்பு வழி பாடுகளும் நடைபெறும். சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து, மலர் அலங்காரம், பூலங்கி சேவை, தீபாராதனை ஆகியன நடைபெறும்

error: Content is protected !!