News September 8, 2025
குமரியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
குமரி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT
News September 9, 2025
குழித்துறையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செப்.11 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, கிள்ளியூர், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
News September 9, 2025
குமரி: பயணிகள் அச்சப்படத் தேவையில்லை – ஆட்சியர்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.