News September 10, 2025
குமரியில் இதுவரை 186 முகாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 186 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை 6 முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 10, 2025
குமடி: ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதில், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News September 9, 2025
சட்டமன்ற உறுதி குழு 11ஆம் தேதி குமரி வருகை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் (2024-2026) அதன் தலைவர் .வேல்முருகன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று வருகை தரவுள்ளார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
குமரியில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளில் 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.