News October 8, 2025
குன்றத்தூரில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் வெங்கடேசன். அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News October 8, 2025
காஞ்சி: டிகிரி இருக்கா? வங்கி வேலை ரெடி!

காஞ்சிபுரம் மக்களே, கனரா வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சிக்கு 3,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் 394 காலிப்பணியிடங்கள் உள்ளது. விப்பமுள்ளவர்கள் அக்.12க்குள் <
News October 8, 2025
காஞ்சிபுரம் நீதிபதி அதிரடி மாற்றம்!

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக செயல்பட்டு வந்த செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக, நேற்று (அக்.7) பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், சென்னை மாவட்ட நீதிபதியாக செயல்பட்டு வந்த தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஎஸ்பி-யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்து சர்ச்சையான நிலையில், நீதிபதி செம்மல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News October 8, 2025
பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 11.10.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் தாமல் உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம் , திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மாடம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு