News November 14, 2024

குன்றத்தூரில் எலி மருந்தின் நெடி பரவி மகன், மகள் உயிரிழப்பு

image

குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன்(34), வீட்டில் எலி தொல்லை இருந்ததால், எலி மருந்து பயன்படுத்தியுள்ளார். வீட்டில், எலி மருந்தின் நெடி பரவி, கிரிதரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிதரனின் மகன், மகள் உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Similar News

News March 3, 2026

காஞ்சி: மெடிக்கலில் மாத்திரை வாங்குறீங்களா?

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 3, 2026

காஞ்சிபுரம்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 3, 2026

காஞ்சிபுரத்தில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!