News March 15, 2025
குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்து அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 15, 2025
நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான http://villuppuram.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலாளர் அறிவித்துள்ளார்.
News March 15, 2025
கள்ளக்குறிச்சியில் அகழாய்வு நடக்கும் இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடத்த திட்டமிடபட்டுள்ளது என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. கள்ளக்குறிச்சியில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறித்து அறியலாம். சேந்தமங்கலம் கோட்டை, தியாக துர்கம் கோட்டை, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிச்சாடனர் சிற்பம் ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்க உள்ளது.
News March 14, 2025
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.