News April 23, 2025
குத்துக்கல்வலசை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.
Similar News
News September 28, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News September 27, 2025
தென்காசி எம்.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 27, 2025
தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..