News March 25, 2024
குத்தாலம் அருகே தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பெயரில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்து தலைமையில் முதல் நிலை காவலர்கள் ஜெயசெல்வம் , சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி பணம் பரிசுப் பொருட்கள் உள்ளதா என தீவிர சோதனை செய்தனர்.
Similar News
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு ஊசி திட்டத்தின் கீழ் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று(டிச.29) முதல் தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போட்டு கொடிய வைரஸ் கிருமிகளில் இருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
மயிலாடுதுறை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உரிய சான்றுகளுடன் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்


