News December 7, 2024

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 8, 2026

விருதுநகர் : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

News March 8, 2026

விருதுநகர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.

2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.

3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.

இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 8, 2026

விருதுநகர்: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!