News August 13, 2025

குண்டர் சட்டத்தில் அடைக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குப்பாட்ட பகுதியை சேர்ந்த தனது மாமனாரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளியான தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந் ராவ் (வயது-42), இவரை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 14, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

image

கோவில் நகரமான குடந்தையில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற விழாவான மகாமகம் திருவிழா 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு தேவையான முன்னேறுபாடுகள் பற்றி இன்று (ஆகஸ்ட் 13) கும்பகோணம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை கலெக்டர். பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.

News August 13, 2025

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

image

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!