News January 24, 2026
குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா

குடியாத்தம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களோடு, அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர் என ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
ALERT: வேலூரில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கோணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
News January 30, 2026
வேலூர்: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவையில்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வராது!
இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.
News January 30, 2026
வேலூர்: துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறி நாய்!

போ்ணாம்பட்டு அருகே குப்பைமேடு பகுதியில் நேற்று (ஜன.29) முஹம்மத் பஷீா்(14), உம்மேஹனி(5) , ஷாயிரா(4) ஆகிய 3 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 3 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து குதறியது. நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திதனர்.


