News April 25, 2024
குடிநீர் சொத்து வரி விரைந்து வசூலிக்க வேண்டும்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்த அனைத்து துறை அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் மேலும் குடிநீர், சொத்து வரி நிலுவை இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திட்ட இயக்குனர் லோகநாயகி கலந்து கொண்டார்.
Similar News
News August 21, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

ராணிப்பேட்டைமாவட்டத்தில் கம்பு, கேழ்வாகு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கென மாநில அளவில் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 15.03.2026. இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
ராணிப்பேட்டை காவல்துறை புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை காவல்துறை தினம்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் மக்களின் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விடுபட விழிப்புணர் செய்தி வெளியிடப்பட்டது, இதில் போதையை தவிர்த்து வளமான மகிழ்ச்சி பாதையில் நடப்போம். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற வாசகத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
News August 21, 2025
ராணிப்பேட்டை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)