News September 2, 2024

குடவாசலில் குவிண்டால் பருத்தி ரூ 7,639 க்கு ஏலம்

image

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,639 மற்றும் குறைந்த பட்சமாக ரூ.6,809-க்கும் விற்பனையானது. மொத்தத்தில் 43.31 குவிண்டால் பருத்தி ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 158 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் பருத்தியை நன்கு உலர்த்தி எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மேற்பார்வையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

திருவாரூரில் கல்விக் கடன் முகாம்-ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில், வரும் செப்.17-ம் தேதி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News September 12, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.12) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 12, 2025

திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் நல மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு https//www.tngrisnet.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!