News March 13, 2025

குச்சனூர் சனிபகவான் கோவில் பற்றி தெரியுமா?

image

இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் குச்சனூரில் தான் உள்ளது . இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடுகிறது. இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் , குடும்பத்தில் உள்ள சிக்கல் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை . மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Similar News

News March 4, 2026

தேனி: பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.!

image

மதுரையை சேர்ந்தவர் காஜாஉசேன் (80). இவர் சில தினங்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் உள்ள அவரை நண்பரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த காஜாஉசேன் மீது சுப்பிரமணி என்பவர் பைக்கை ஓட்டி வந்து மோதி உள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

News March 4, 2026

தேனி: வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருட்டு

image

பெரியகுளம், வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

News March 4, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.3) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவில் காவல் உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

error: Content is protected !!