News December 29, 2025
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.
Similar News
News January 25, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய். *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *மனதில் உறுதி வேண்டும்.
News January 25, 2026
மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்: எலோன் மஸ்க்

டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டாவோஸில் பேசிய அவர், தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மனிதர்களை மிஞ்சி வகையில் சிக்கலான வேலைகளையும் செய்யும் என்றும், விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்புடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
இன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகள்!

கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.


