News September 24, 2024

கிள்ளியூரில் முழு மானியத்தில் வாழைக்கன்றுகள்

image

கிள்ளியூர் வட்டாரதோட்டக் கலை உதவி இயக்குநர் நவ நீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிள்ளியூர் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வாழைக்கன்றுகள் (நேந்திரன் ரகம்) வழங்கப்பட்டு வருகிறது. புகைப்படம், ஆதார் நகல், உட்பட ஆவணங்களுடன் கருங்கலில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி வாழைக்கன்று பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9600 824171, 96987 04014, 80156 86758.

Similar News

News August 19, 2025

குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News August 18, 2025

குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News August 18, 2025

முன்னாள் இராணுவ வீரர்களின் குறை தீர்க்கும் நாள்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

error: Content is protected !!