News April 17, 2025

கிளி காணவில்லை போஸ்டர் ஒட்டிய தொழிலதிபர்

image

சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. அதோடு கிளியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி வலை வீசி தேடிவந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகில் உள்ள கோயில் மரத்தில் அந்த கிளி இருப்பதை அறிந்த சதீஷ் அங்கு சென்று அதனை மீட்டுள்ளார்.

Similar News

News July 5, 2025

எச்சரிக்கை! ஆன்லைன் நட்பால் ஆபத்து

image

கரூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (30); இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவர் மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பேசியதில்,பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதை நம்பி நேற்று முன்தினம் சென்ற ஜெகதீசனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை.

News July 5, 2025

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

image

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்டபிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை5) மதியம் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்த நாட்டுச்சர்க்கரை 11 மணிக்குள் கொண்டு வரவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 4, 2025

ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!