News June 25, 2024
கிருஷ்ணகிரி: 4,000 ஆண்டுகள் கல்லாயுதம் கண்டெடுப்பு

ஊத்தங்கரை, சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லாயுதம் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிகளவில் இருந்தது. இங்கு மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவு பொருட்கள் கிடைத்தன.
Similar News
News September 11, 2025
கிருஷ்ணகிரி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

கிருஷ்ணகிரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <
ஷேர் பண்ணுங்க!
News September 11, 2025
கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏணுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News September 10, 2025
கிருஷ்ணகிரி: காவல் துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. திருடர்கள் தற்போது வாகனங்களின் ஸ்டோரேஜ் பெட்டியில் உள்ள பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து திருடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.