News May 18, 2024

கிருஷ்ணகிரி: 40 பேருடன் சென்ற பஸ் விபத்து..!

image

மத்தூரில் நேற்று தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவிலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்த அதே இடத்தில் தினமும் ஒரு டூவீலர் அல்லது கார் ஏதாவது ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது.

Similar News

News December 29, 2025

கிருஷ்ணகிரி: பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது!

image

காவேரிப்பட்டணம் அருகே மேட்டுபள்ளத்தை சேர்ந்த விவசாயி சரசு (65) மற்றும் மாதேசன் (56) ஆகியோருக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (டிச.28) ஏற்பட்ட தகராறில் சரசுவை மதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

News December 29, 2025

கிருஷ்ணகிரி: அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர்!

image

போச்சம்பள்ளியில், ஆனந்தூர் ஏரியில் மண் கடத்தல் நடப்பதாக வந்த புகாரின் பேரில் கலெக்டர் தினேஷ்குமார் நேற்று (டிச.28) சோதனையில் ஈடுபட்டார். அதிகாரிகள் வருவதை கண்ட அவர்கள் தப்ப முயன்றனர். மேலும் வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம், டிரைவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அதிகாரிகளை மிரட்டிய சுரேஷ் (32) மற்றும் தங்கபாலு (32) ஆகியோரை கைது செய்தனர்.

News December 29, 2025

கிருஷ்ணகிரி மதுபிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் (டிச-29) (திங்கட்கிழமை) அன்று முதல் வாடிக்கையாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்பட்ட காலி பட்டிலின் அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10/-னை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். என கிருஷ்ணகிரி டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!