News September 19, 2025

கிருஷ்ணகிரி: வெள்ள அபாய எச்சரிக்கை! உஷார் மக்களே!

image

கிருஷ்ணகிரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகளவிலான உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News September 19, 2025

கிருஷ்ணகிரிக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திட்டம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க விளையாட்டு வளாகத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கான பயிற்சிக்களமாக இந்த பாரா விளையாட்டு அரங்கங்கள் நிச்சயம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

News September 19, 2025

கிருஷ்ணகிரி: கேஆர்பி அணையை பற்றி தெரியுமா?

image

கேஆர்பி அணை துடுகனஹள்ளி கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1955ல் தொடங்கப்பட்டு, 1958ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காவேரிப்பட்டினம் & அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்கள் இந்த அணையால் மிகுந்த பயனடைகின்றன. இந்த அணைக்கு அருகில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது இந்த பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஷேர் பண்ணுங்க!

News September 19, 2025

கிருஷ்ணகிரி: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்!

error: Content is protected !!