News April 28, 2025
கிருஷ்ணகிரி வி.ஏ.ஓ. தூக்கிட்டுத் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி கவுண்டன் உரை சேர்ந்தவர் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 28, 2025
கோர விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பேர் பலி

ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News April 28, 2025
10th பாஸ் போதும்: ரூ.15000 சம்பளம்

கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு <
News April 28, 2025
காட்டில் ஆடு மேய்க்க சென்ற பெண் மர்ம சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மா (45). இவர் அங்குள்ள காட்டில் ஆடு மேய்க்க சென்றார். இந்நிலையில் மாலை வெகு நேரம் ஆகியும் பாப்பம்மாள் வீடு திரும்பாததால் காட்டிற்கு சென்று உறவினர்கள் தேடினர். அப்போது அங்கு பாப்பம்மாள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.