News August 10, 2024
கிருஷ்ணகிரி: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கடனுதவி

தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரியில் 102 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்படுத்தி தருவது, தொழில்,விவசாயத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
Similar News
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539760>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
கிருஷ்ணகிரி: பெண் பிள்ளை உள்ளதா? APPLY NOW! (2/2)

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் ஒரு ‘குட்டி இங்கிலாந்து’

கிருஷ்ணகிரி நகரத்தில் இருந்து 77 கி.மீ தொலைவில் தளி பூங்கா மற்றும் ஏரி அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள இந்த கிராமமானது முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் எப்போதும் குளிர்ச்சியான சூழலே இருக்கும். ஆங்கிலேயர்களுக்கு இந்த இதமான சூழல் இங்கிலாந்தை நினைவுப்படுத்தியதால் இதனை ‘குட்டி இங்கிலாந்து’ என அழைத்தனர். ஷேர் பண்ணுங்க!