News January 25, 2026
கிருஷ்ணகிரி: வாலிபர் துடிதுடித்து பலி!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (35). இவர், உத்தனப்பள்ளி அருகே பாத்தக் கோட்டா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்தில் இருந்த எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை அறியாத மற்றோரு தொழிலாளி எந்திரத்தை இயக்க அகிலேஷ் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
கிருஷ்ணகிரி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!
News February 3, 2026
கிருஷ்ணகிரி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!
News February 3, 2026
கிருஷ்ணகிரி: மரத்தில் சொருகிய பைக்; பறிபோன உயிர்!

தளி அடுத்த உனிசெந்தம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மனோஜ் (16), நேற்று (பிப்.2) அதே பகுதியை சேர்ந்த பவன் குமாருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கோபசந்திரம் அருகே சென்ற போது பைக் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பவன்குமார் படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


