News September 11, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News September 12, 2025

பணியாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், ஒரு புதிய உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்து, அந்நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

News September 11, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 10) மொத்தம் 296.7 மி.மீ மழை பதிவானது. இதில், ஓசூர் பகுதியில் அதிகபட்சமாக 49.2 மி.மீ மழையும், கே.ஆர்.பி அணையில் 59.2 மி.மீ மழையும் பதிவானது. அதேபோல், ராயக்கோட்டையில் 27 மி.மீ மழையும், கெலவரப்பள்ளி அணையில் 26 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

News September 11, 2025

ஒசூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

image

ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சுமார் 2,000 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த விமான நிலையம் அமைப்பதற்கான இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இது ஒசூர் பகுதிக்கு ஒரு முக்கியமான வளர்ச்சி திட்டமாகும்.

error: Content is protected !!